கோவை: மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கையால், தொழில் வளர்ச்சி அடைவதுடன் ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய அடிப்படை தேவையான ஆடையை குறைந்த விலையில் பெறுவதற்கு வழி வகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது” என்று ஜவுளித் தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியது: “மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை இரண்டையும் 5 சதவீத விதிப்புக்குள் கொண்டு வந்தது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், சிமென்ட், விவசாய பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.