தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் 3-வது மொழி கற்கலாம். ஆனால், ஏழை குழந்தைகள் கற்கக் கூடாதா? என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமாகாவின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை எழும்பூரில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர்கள் விடியல் சேகர், இ.எஸ்.எஸ்.ராமன், பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.