சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்துக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி `மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் சென்னை ஈசிஆரில் கடந்த 2023 ஆக.12 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் 2023 செப்.10 அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏற்கெனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதே டிக்கெட்டுடன் இந்நிகழ்ச்சிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது.