ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறையில் 15, சென்னையில் 5 இடங்கள் என தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.