மதுரை: “கிரானைட் உரிமம் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்” என மதுரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்குகள் மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது சம்மன் அனுப்பப்பட்டது.