லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட்டை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கும் வகையில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.
வரும் 22-ம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் உலக அளவில் நடைபெறும் விளையாட்டு தொடர்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கமிக்கும் களமாக ஐபிஎல் உள்ளது. இந்த நிலையில் இன்சமாம் அது குறித்து பேசியுள்ளார்.