அகமதாபாத்: ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்கம் கொடுக்க முயன்றார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பில் சால்ட், 4-வது பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது. 9 பந்துகளை சந்தித்த பில் சால்ட் 16 ரன்கள் எடுத்தார்.