லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (மார்ச் 21) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் விமானங்கள் இயக்கப்படாததால் சுமார் 2,00,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.