நியூயார்க்: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன.