நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் வழங்க வலியுத்தி வரும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் இடையே ஜி-4 எனப்படும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நா-வின் பாதுகாப்பு அவையை சீர்திருத்துவது உட்பட ஐநா அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.