புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோரில் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, பயாபர் கிராமத்தில் மூன்று மர்ம நபர்கள் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து சிறுமி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.