நாமக்கல்: காஸ் டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலம் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதால் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 5 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.