ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக 1000 கோயில்கள் சேர்க்கப்பட்டு, வைப்பு நிதியாக ரூ.110 கோடிக்கான காசோலை மற்றும் கோயில்களுக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021–22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், “12,959 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலைநிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 12,959 கோயில்களுக்கு ஏற்கெனவே ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் வைப்பு நிதி, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கான அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது.