செவ்வாய்க்கிழமை துபாயில் ஆஸ்திரேலியா எனும் பெரும் தடையை விரட்டல் மன்னன் விராட் கோலி தன் அதி திறமையான ஆட்டத்தினால் இலக்கைக் கடந்து சாம்பியன்ஸ் டிராபி 2025, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணியை நுழையச் செய்தார்.
மாறாக கோலியின் சமகாலத்தவரும் ரூட், வில்லியம்சன், ஸ்மித், கோலி ஆகிய நான்மணிகளில் ஒரு மணியான ஸ்டீவ் ஸ்மித் நேற்று தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வேதனை தெரிவித்துள்ளார்.