மதுரை: ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதி பொதுக் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்க உள்ள நிலையில், கூட்டத்தில் அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை அதிமுகவினரிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் நாளை மறுநாள் (மார்ச் 2) நடக்கும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்ன பேசப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தப் பொதுக் கூட்டம் அதிமுகவை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.