மதுரை: “மீண்டும் தமிழகம் வரும்போது பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக ஏற்பாடு செய்யப்படும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தல் மற்றும் பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: "ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது எதற்காக என்பது தெரியவில்லை. ஏற்கெனவே போன் மூலமாக ஓபிஎஸ்ஸிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.