திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, டவுன் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் நேற்று கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை சம்பவத்தில் போலீஸாரால் தேடப்பட்டுவந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். முக்கிய நபர் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி போலீஸ் கைது செய்துள்ளது. | வாசிக்க > ஜாகிர் உசேன் கொலையில் தொடர்புடைய நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த நெல்லை போலீஸ்!