மதுரை: ‘போக்குவரத்து கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளது. அதனால் ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது’ என்ற பதிலை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், பணப் பலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் பழனி கிளையில் தேர்வு நிலை உதவிப் பொறியாளராக பணிபுரிந்து 2024-ல் ஓய்வு பெற்றவர் செளந்திரராஜன். இவர் தனக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை, விடுப்பு ஊதிய பாக்கி ரூ 78,33,778 வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமா்வில் ரிட் மனு தாக்கல் செய்தார்.