கோவை: கரூர் சம்பவம் உள்ளிட்ட திமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் 2026-ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தையை இழந்து வாடும் பெண் குழந்தைகளுக்கு, திருமதி சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தை கல்வி நிதி வழங்கும் நிழக்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிதியுதவியை வழங்கினார்.