லண்டன்: இங்கிலாந்து உடனான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி கடந்த வியாழக்கிழமை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 மற்றும் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தன. இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.