தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.