இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானி மொசென் பக்ரிஜாதே கொல்லப்பட்ட விதத்தை ஈரான் மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர்.
ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் விரும்பவில்லை. அதனால் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே ஈரானுக்கு பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்து வருகிறது. இஸ்ரேலும் தன் பங்குக்கு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ஈரான் – இஸ்ரேல் மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் பெரீடவுன் அப்பாஸி. இவர் ஈரான் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவர்.