சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன என மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரை தெரிவித்து வருகிறார். அதில்,1989ம் ஆண்டு நான் முதல் முதலில் அமைச்சராக பொறுப்பேற்றேன். அமைச்சராக எப்படி பணியாற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வழியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எனக்கு பெரிய இலாகாவை ஒதுக்கி யிருக்கிறார். இந்த பிறப்பு அவர்களுக்கான பிறப்பு என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஏற்றுக்கொண்ட பொறுப்பில் அமைச்சர்கள் சரியாக பணியாற்றி வருகின்றனர். பெரம்பலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ரூ.17,455 கோடியில் 23 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 16 கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன:
*கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன
*ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
*ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
*நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள்
* குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* திமுக அரசு அமையும் போதெல்லாம் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது.
* 420 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
*ரூ.830 கோடியில் 100 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.
நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு
* நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது
திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். காந்தி மார்கெட்டை சீர் செய்து, பெரிதுபடுத்துவதற்காக ரூ.50 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். என தெரிவித்தார்.
சாலை பணிகள்
*1280 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளாட்சி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன
*ரூ.328 கோடியில் உள்ளாட்சி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
*தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகின்றன.
*ரூ.3000 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் எங்கேயும் மூடப்படவில்லை
*அம்மா உணவகம் எங்கேயும் மூடப்படவில்லை. சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது.மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
ராமநாதபுரம், பெரம்பலூர் மாநகராட்சியாக்க நடவடிக்கை
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 530 எம்எல்டி நீர் வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது.
21 நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணி.
கரூர், கும்பகோணம், தாம்பரம், நெல்லை ஆகிய மாநகராட்சிகள், 21 நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள். ரூ.704 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும். திருச்செங்கோடு, உடுமலை, பழனி ஆகிய 3 தேர்வு நிலை நகராட்சிகளை, சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
கழிவு நீர் கட்டமைப்புகள் புனரமைப்பு
*சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள மிகவும் பழமையான கழிவு நீர் கட்டமைப்புகள் முதல் கட்டமாக ரூ.740 கோடியில் புனரமைக்கப்படும். கோடை காலத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
புதிய பேருந்து நிலையங்கள்:
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் மேலும் பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். திருச்செந்தூர். ஆற்காடு, ராணிப்பேட்டை நகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் கூடுதல் பணி.
பேருந்து நிலையங்கள் மேம்பாடு:
கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்
புதிய சந்தைகள்:
தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர்
சந்தைகள் புதுப்பித்தல்:
திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை
*வால்பாறையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். வால்பாறை நகராட்சியில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்:
கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம்
புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்:
கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம்
புதிய பாதாள சாக்கடை வசதி:
தென்காசி, இராணிப்பேட்டை
*30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
The post கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன: மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரை appeared first on Dinakaran.