கடற்கொள்ளையர்களை வேட்டையாட ஐஎன்எஸ் சுனைனா கப்பல், கர்நாடகாவின் கார்வாரில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ரோந்து கப்பலின் பயணத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபரில் ஐஎன்எஸ் சுனைனா ரோந்து கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த சூழலில் நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கும் ஐஎன்எஸ் சுனைனா கப்பலில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.