மன்னார் வளைகுடா கடலில் மூழ்கும் காரைச் சல்லி தீவை மீட்க உலக வங்கி ஆதரவுடன் ரூ.50 கோடியில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தனுஷ்கோடியிலிருந்து தூத்துக்குடி வரையிலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது.