கடலூர்: அரசு வழங்கும் சேவைகள் மக்களுக்கு எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இதற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த முதல்வர் ஸ்டாலி னுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நேற்று காலை நடந்த இந்நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பயனாளி ஒருவருக்கு காதொலி கருவியை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.