புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், அது இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சந்தைகளை தேடுமாறு ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது
இதுகுறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கூறியதாவது: தற்போதைய சூழலை ஏற்றுமதியாளர்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்திய இறால் மற்றும் பிற மீன் வகைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்புகள் உள்ளன.