லண்டன்: இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா களத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சவால் கொடுக்கும் வகையில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 387 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.