மதுரை: “பொதுமேடையில் கீழ்த்தரமாக பேசிய அமைச்சரை, கட்சிப்பதவியிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது, அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் திமுக அரசும் அதன் தலைவரும் ஆதரிப்பதாகத்தான் அர்த்தம்,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று (ஏப்.12) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. இதில் தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினார்.