திருப்பூர் அருகே குள்ளாப்பாளையம் என்ற இடத்தில் பாலத்துக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் விழுந்து நாகராஜ் என்பவரும், அவரது மனைவி ஆனந்தியும் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பள்ளத்தில் விழுந்த அவர்களது 12 வயது மகள் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குண்டடம் பகுதியை சேர்ந்த அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் இந்தவிபத்து நேரிட்டுள்ளது.
பிரதான சாலையில் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் ஓர் இடத்தில் வாகன ஓட்டிகள் நெருங்காமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படாதது அலட்சியத்தின் உச்சம். அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் பள்ளம் இருப்பதே தெரியாத வகையில் இருள்சூழ்ந்திருப்பது மற்றவர்களின் பாதுகாப்பை துச்சமென மதிக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.