‘கண்ணாடிப்பூவே’ பாடல் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். ‘ரெட்ரோ’ படத்தின் ‘கண்ணாடிப்பூவே’ பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பாடல் வரிகள், இசை என சூர்யா ரசிகர்கள் மட்டுமன்றி இசை ஆர்வலர்கள் மத்தியிலும் இப்பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “கண்ணாடிப்பூவே என் இதயத்திற்கு நெருக்கமான பாடல். மேலும் எனது சில படங்களில் நான் இசையமைப்பதை நான் எப்போதும் விரும்பும் வகையிலான இசை. நீங்கள் காட்டும் அன்புக்கு மிக்க நன்றி.