வாஷிங்டன்: மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் நடவடிக்கையை ஏப்ரல் 2 வரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து கனடாவும் அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் முடிவை நிறுத்திவைத்துள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்க ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களின் தலையீடு ஆகியன இருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு பரஸ்பர வரி குறித்து அவர் அறிவித்தார்.