நெல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக இன்றும் வெள்ளப் பெருக்கு நீடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 101 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் மாஞ்சோலை, ஊத்து பகுதிகளில் தலா 80, காக்காச்சியில் 90 மி.மீ. மழை பெய்திருந்தது.