நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குமரியில் கடல் நடுவேயுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக இந்த படகுப் போக்குவரத்து அமைந்துள்ளது. சமீபத்தில் இவ்விரு பாறைகளையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது.