தென்காசி: “திமுகவை விமர்சனம் செய்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் கோபம் வருகிறது? கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று குற்றாலத்தில் இருந்து புறப்பட்டு கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். காவல் துறைக்கே இப்படி ஒரு நிலை என்றால் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?