தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. பல இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான துணை மின் நிலையம் உள்ளது. இந்நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.