கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிராவல் மண் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கோபிநயினார் உட்பட 44 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் அடுத்த கரடிபுத்தூர் கிராமத்தில் கள்ளாங்குத்து வகையை சேர்ந்த ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தில், சென்னை உள்வட்ட சாலைப்பணிக்காக தனியார் கிராவல் மண் குவாரி செயல்பட சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.