சென்னை: இந்திய அணியில் கருண் நாயருக்கு மாற்றாக நம்பிக்கை தரும் இளம் வீரர் சாய் சுதர்ஷனை ஆட வைக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் இந்த தொடரில் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.