ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா – கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 3-வது நாள் ஆட்டத்தில் 125 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 98, ஆதித்யா சர்வதே 79 ரன்கள் எடுத்தனர். 37 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த் ரேகாடே 1, துருவ் ஷோரே 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் டேனிஷ் மலேவர், கருண் நாயர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.