காண்டர்பெரியில் இந்தியா ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று தொடங்கிய முதல் அன் அஃபிசியல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் 186 ரன்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ ‘இந்தியா ஏ’ அணி ஒரே நாளில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைக் குவித்தது .
ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தான் இடம்பெற வேண்டும் என்பதை கருண் நாயரின் அதிரடி இன்னிங்ஸ் வலியுறுத்தியுள்ளது. அவர் 246 பந்துகளில் 24 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிராக நம் சென்னையில் 300 ரன்களை அடித்தவர் கருண் நாயர். துரதிர்ஷ்டவசமாக அவர் ஒழிக்கப்பட்டு இப்போது பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்.