கரூர்: கரூர் நெரூரில் எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்குக்கு தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்கு தொடர்பான வழக்கை முறையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார். எச்சில் இலை சடங்குக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அரசு கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும். எச்சில் இலை சடங்கை சுயமரியாதை மரபு கொண்ட தமிழக பக்தர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரூரில் எச்சில் இலை சடங்குக்கு தடை நீடிக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.