கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகி இருப்பது, தமிழகத்தையே வேதனையிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அரசியலில் நுழைந்த நடிகர் விஜய், ‘ரோடு ஷோ’ வடிவிலான பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெரிசல் ஏற்பட்டு இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் குழந்தைகள்; 18 பேர் பெண்கள். காயமடைந்த ஏறக்குறைய 60 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.