கரூர்: கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.