பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோயிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களை தானே புதைத்ததாக முன்னாள் ஊழியர் போலீஸிஸிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அது தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.