பெங்களூரு: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது என 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. 2023-ல் இதற்கான விதிமுறைகளை யும் உச்ச நீதிமன்றம் வகுத்து அளித்துள்ளது.