‘கறுப்பு நிறம் இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் உண்மை. கறுப்பு நிறம் அழகானது. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளக் கூடியது’ என தன் மீதன நிற பேத விமர்சனங்களுக்கு கேரள தலைமைச் செயலர் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர் சாரதா முரளிதரன். கேரள அரசின் திட்டமிடல் துறை கூடுதல் செயலராக இருந்த அவர், தனது கணவர் டாக்டர் வி.வேணு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார்.