கல்பாக்கம்: கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் துரை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கண்ணன் என்பவர் உயிரிழந்தார். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறுவதால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
The post கல்பாக்கம் அருகே ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.