சென்னை : கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள் மோதலில் மாநில கல்லூரி மாணவன் மரணமடைந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசுக்கு, உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது. பல தலைவர்கள் படித்த கல்லூரிகளில், மாணவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
The post கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க ஐகோர்ட் பரிந்துரை appeared first on Dinakaran.