சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்விக் கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.