திருவனந்தபுரம்: ‘‘காங்கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவையில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்துக்கு சசிதரூர் எம்.பி. திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்போது பாராட்டி வருகிறார். சமீபத்தில் கூட பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசியதை பாராட்டியிருந்தார்.